Friday, February 6, 2009

விடுதலை - 2



ஒவ்வொரு ஆறாவது அறிவு பிறக்கும் போது அழிவு என்ற கர்ப்பம் தரித்தே பிறக்கிறது. கர்ப்பத்தில் உள்ள கரு பிறப்பில் அழகாக தோன்றினாலும் அதன் உருவம் மெல்ல மெல்ல அரக்க உருவத்தையே அடைகிறது. முதலில் அதனிடத்தில் அன்பு, பண்பு, வளமை, இனிமை என எல்லாம் இருக்கும். சில கால இடைவெளியிலேயே அது அரக்கனாக மாறி, புயல் காற்றில் பறவும் தீயைப் போல் திசை எங்கும் சீறிப் பாய்ந்து மனித குலத்தோடு போர் தோடுக்கும்.
சீறும் வாகனங்கள், வண்ணங்களாலும் வடிவங்களாலும் கம்பீரமான கட்டிடங்கள், தேவைகளைக் கூறும் அலங்கார அறிவிப்பு பலகைகள், பளபளக்கும் சாலை, சாலையை இரண்டாக பிரிக்கும் பசுமை பூங்காக்கள் என ஆறாவது அறிவு பூத்துக் குளுங்கும் ஒரு மாநகரின் பிரதான சாலை, காலை வேளையில் இயந்திரகதியாய் இயங்கிக் கொண்டிருந்தது. சாலையில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் சிந்தனை அலைகளிலும், ஆசை மனங்களிலும் பயணித்துக் கொண்டிருக்க...
இவர்களுக்கு மத்தியில்...

No comments: