Friday, February 13, 2009

விடுதலை - 4




அவன் மொழியை துறந்ததன் பின்னணியில் பல உருக்கமான, இறுக்கமான காட்சிகள் கடந்து சென்றுள்ளன. தமிழ்தான் அவனுடைய தாய்மொழி ஆனால் அவனின் கல்வி ஆங்கிலவழி யாகவே இருந்தது. தமிழைவிட ஆங்கிலம் அவன் நாவில் சாரளமாக குடிகொண்டிருந்தது. அவனுடய நட்பு வட்டாரமும் அப்படியே இருந்தது.

அவனின் கல்லூரி வாழ்க்கை, உற்சாகமும் உல்லாசமுமாக, குறும்பும் கூத்துமாக தடையில்லா காற்றைப் போல் சென்றது. அவன் மாபெரும் செல்வந்தரின் ஒரே மகன் என்பதால் அப்படியொரு வாழ்க்கை சாத்தியமாயிற்று. கல்லூரியில் எப்போதும் ஐந்து ஆறு பேர் கொண்ட கூட்டத்துடன் திரிந்தன். உலகில் எந்த ஒரு நிகழ்வும் அவனையும் அவன் நட்பு வட்டாரத்தையும் பாதித்தது இல்லை. தமிழகம் முழுவதும் பந்த் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. முதன் முதலில் அவன் அறிந்து கொண்ட, பங்கெடுத்துக்கொண்ட இந்த நிகழ்வு தான் அவனின் மொழி துறவுக்கு புள்ளி வைத்தது...

No comments: