Thursday, July 3, 2008

குசேலன் - காக்கா கூட்டத்தின் கரைச்சல்!






குசேலன் படத்தின் இசை கடந்த திங்கள் கிழமை வெளியிடப்பட்டது.

விழாவினை காண வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால் பாடலை இதுவரை காதில் கேட்க வாய்ப்பே இல்லாம்ல் போய்விட்டது

காசு கொடுத்து சீடி வாங்கியும் நல்ல மியுஸிக் சிஸ்டத்தில் போட்டும், பாடலை காது கொடுத்து கேட்கமுடியாமலே போய்விட்டது.

இசையும் பாடல் வரியும் நீயா நானா என போட்டி போட்டு, காசு கொடுத்து வாங்கியவன் காதில் பெரிய குண்டை போட்டுவிட்டது.


விழாவில் ரஜினி “குசேலன் படத்தில் முதலில் இசைக்காக என் மனதி்ல் வந்தவர் இளையராஜா தான்” என்றார்.

அவர் ஆசை நிறைவேறியிருந்தால் நல்ல இசை அரங்கேறியிருக்கும் குசேலனுக்காக.


பாடல் வெளியானவுடன் ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய ‘முத்து’ படத்தில் கூட ‘ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி’ என நல்ல வரிகள் அமைந்த பாடல் இருந்தது.


இரண்டு லட்சம் சீடிக்கள் விற்று சாதனை படைத்திருக்கும் ‘குசேலன்’ அதே சமயத்தில் ஓரிரு தினங்களுக்குள்ளேயே நான்கு லட்சம் காதுகளை பதம் பார்த்த சாதனையையும் சேர்ந்து படைத்திருக்கிறது.


இனியொருமுறை தப்பிதவறி வெள்ளையன் நம் நாட்டை கைப்பற்றினால் அவனை வெளியேற்ற அகிம்சையான ஒரு ஆயுதம் ரெடி ‘குசேலன் குண்டு’.




2 comments:

லக்கிலுக் said...

இதெல்லாம் ரொம்ப அநியாயம் :-(

பாடல்கள் சூப்பராக இல்லாவிட்டாலும் சுமாராக இருக்கிறது. ஆனாலும் ரஜினியின் கெத்துக்கு ஏற்ற அளவில் இல்லை எனலாம்!

surivasu said...

Kuselan songs will be Super Hit once Movie released. When chandramuki songs were release, It was not super hit. What happened after chandramuki released. Do Post your criticism after 1 month dear