Monday, June 16, 2008

தசாவதாரம் - கமல் மாட்டிய கம்மல்!





கமல்கள் நடித்த தசாவதாரம் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆசைபட்டு இரவு காட்சி பார்க்க முடிந்தது.


நடிகர், பாடகர், நடன கலைஞர் என்ற அவதாரத்துடன் கமல் தற்போது கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என்ற தொழில்நுட்ப அவதாராங்ளையும் எடுத்துவருவதால், இப்போது கமலின் படங்கள் சர்ச்சையில்லாமல் வெளிவருவதில்லை.


தசாவதாரமும், கதைக்கான உரிமையிலிருந்து கதைவரை படம் வெளிவருதற்கு முன்னே நீதிமன்றம் வரை சர்ச்சையாகி விவாதிக்கப்பட்டு, வழக்குகளின் தடைகளிருந்து வெளிவந்து திரையரங்குகளில் மக்களின் எதிர்ப்பார்ப்பு வெள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.


நடிகர் கமல்களை பார்க்க வந்த ரசிகபெருமக்களுக்கு நல்ல விருந்து படைத்துள்ளார் என்று சொலல்த்தோன்றும் அதேவேளையில் ஒப்பனையால் கமல்களின் நடிப்பு ஓவியப் பொம்மைகளை கொண்டு படத்தில் அசின் போடும் நாடகம் போல் ஆகிவிட்டது. அவதார கமல்களின் ஒவ்வொரு ஒப்பனையும், அவரை காட்சிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற முகபாவனைகளை வெளிப்படுத்த முடியாமல் சதி செய்துள்ளன என்பது திரையில் வடு இல்லாமல் தெரிகிறது.


நான் ரசித்த, அன்பே சிவம் படத்தில் விபத்துக்கு பிந்தைய நடிப்பு, தெனாலியில் நம்மை துயரத்தில் ஆழ்த்திய நடிப்பு, நாயகன் படத்தில் வயதான கமலின் இயல்பான நடிப்பு இவைகளுக்கு முன்னால் தசாவதார கமல்களின் நடிப்பு துடிப்பில்லாமல் போய்விடுகிறது.


அவதார ஆசை நடிப்பாசையை சாகடித்துவிட்டது.




கதை ஆசிரியர் கமல் தான் சொல்ல நினைத்த கதை என்ன என்பதை நாம் தனியாக கடிதம் எழுதி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் இருப்பது போல் தெரிகிறது.


பனிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை ஆசிய கண்டத்தை துயரத்தில் ஆழ்த்திய சுனாமி பேரலையில் முடிவடைகிறது.


இவ்வளவு பெரிய கதையா என ஆச்சர்ய படவேண்டாம்!


பனிரெண்டாம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று சம்பவத்தின் தடயம் சுனாமி பேரலையில் வெளிவருகிறது அவவ்ளவே!




தமிழகத்தை மட்டுமல்லாது ஆசிய கண்டத்தின் வருமை மிக்க நாடுகளான இந்தோனேசியா, இலங்கை என பாதிக்கப்பட்ட தேசத்தின் மக்களையும், பாதிப்பை உணர்ந்த உலகமக்களையும் இன்றுவரை அதன் அதிர்ச்சி அலைகளில் கட்டிப்போட்டிருக்கும் சுனாமி பேரலை எழும்பியதற்கான காரணம் இதுவாகக்கூட இருக்கலாம் என, தனது கற்பனையான காரணத்தை சொல்ல முற்பட்டிருக்கிறார் கமல்.




சுனாமிக்கான காரணம் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை நடத்தி வரும் சீற்றத்தின் ஒரு நிகழ்வே தவிர அதில் வேரு எந்த காரணும் இல்லை.


என விஞ்ஞானிகள் முதல் மெய்ஞ்ஞானிகள் வரை ஒப்புக்கொண்ட உண்மை!




தமிழகத்தில் சுனாமியின் தாக்கம் மிகமிக கொடூரமாக இருந்தது. அதானல் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளும், குழந்தைகளை இழந்து அனாதையான பெற்றோர்களும் இன்றுவரை மீளாத சோகத்தில் உள்ளனர்.




துயரமிக்க ஒரு நிகழ்வுக்கான காரணம் இதுவாகக்கூட இருக்கலாம் என பனிரெண்டாம் நூற்றாண்டில் மூடமூர்கக்த்தன மனிதர்களுக்கிடையில் நடந்த சமய மோதலால் கடலில் மனிதனோடு(கமலோடு) மூழ்கிடக்கப்பட்ட கல்லான கடவுள் சுனாமியில் வெளிவருவதும்!


அமெரிக்க விஞ்ஞானி கண்டுபிடித்த, பயங்கர அழிவை தரக்கூடிய, ஒரு பயோ ஆயுதத்தை அழிக்க கடலளவு உப்பு தேவைப்பட சுனாமி வருவதும்!




இப்படி சித்தரிப்பது, சுனாமி பாதிப்பின் துயரத்தில் உள்ள மனிதர்களை மேலும் துயரப்படுத்துவது போல் உள்ளது.




கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை சொல்ல முற்பட்டிருக்கிறாரா?




விஞ்ஞானம் ஆக்கத்திற்கு மட்டுமல்லாமல் மனிதகுல அழிவுக்கான விசயங்களையும் செய்துவருகிறது என்ற மெசஜை சொல்லவருகிறாரா?


அமெரிக்காவை பாராட்டுகிறாரா? அல்லது விமர்சிக்கிறாரா?


என சிலபல கேள்விகளுக்கு குழம்பித்திரியும் அவர் மனநிலையை தெளிவாக திரைக்கதைப்படுத்தியிருக்கிறார்.


வசனகர்த்தாவாக பல இடங்களில் பாராட்டை பெற முனைந்திருக்கிறார்... அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்...

அமெரிக்கன்: ஹிரோசிமா ஞபாகம் இருக்கா?

ஜப்பான்: பேர்ல் ஹார்பர் ஞபாகம் இருக்கா?

என பல வரலாற்று சம்பவங்களை பாத்திரங்களுக்கு கொண்டுவந்து பயன்படுத்தியது

பூவராகவன் பேசும் உரையாடல்கள் என பல இடங்களில் வசனகர்த்தா கமல் வெற்றி பெற்றிருக்கிறார்.


இந்த படத்தில் பாராட்ட வேண்டிய ஒரே விசயம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் நிஜமான இந்திய அரசியல் தலைவர்களை திரைக்கதையில் கொண்டுவந்தது!


படத்தில் அசின் பாத்திரம் கமல் எடுத்துக்ககொண்ட கடவுள் கதைக்கு வலு சேர்ப்பதாக இருந்தாலும் என்னைப்போன்ற பாமரனுக்கு எரிச்சலாகவே இருந்தது.


அசின் செய்யும் கேணத்தனமா செயல்களால் ஏற்படும் மிகப் பெரிய விபத்து உட்பட எல்லா செயல்களும் கடவுள் அருளால் காப்பற்றப்படுகிறது.


ஒப்பனை போடவேண்டுமா? அல்லது முகமூடி போடவேண்டுமா? என்பதை கமல் தனது முந்தை சிறந்த படங்களிருந்தும் தசாவரதாரத்திலிருந்தும் கற்று தெளிவடைந்தால் நல்லாயிருக்கும் என என்னை போன்றவர்களின் ஆவலாக உள்ளது.

தசாவதாரம் - அவருக்கு படம் எனக்கு பாடம்!
தசாவதாரம் - கமல் மாட்டிய கம்மல்!







1 comment:

லக்கிலுக் said...

//கமல் தற்போது கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என்ற தொழில்நுட்ப அவதாராங்ளையும் எடுத்துவருவதால், இப்போது கமலின் படங்கள் சர்ச்சையில்லாமல் வெளிவருவதில்லை//

கமல் இப்போது புதியதாக இந்த அவதாரம் எடுத்துவிட வில்லை நண்பரே!

1981ல் வெளிவந்த கமலின் நூறாவது படமான ராஜபார்வைக்கே கமல் தான் கதை, திரைக்கதை அமைத்திருந்தார். அப்போது அவருக்கு வயது 27.